என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதலியிடம் தகராறு"
- கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெண்ணின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
- கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடு என கேட்டார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெண்ணின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெண்ணுக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். இவர் பெண்ணிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடு என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலி உருட்டு கட்டையால் பெண்ணை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து கணவரின் கள்ளக்காதலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்